Recent Posts

அடடா கருணாநிதிக்கு இவ்வளவு மரியாதையா??

இப்பகுதியில்  வரும் சம்பவங்கள் நாளிதழ்களில் வந்த சம்பவங்களை மையமாக வைத்து எழுதபட்டவை    

போர் குற்றத்திலிருந்து தப்பிப்பதற்காக மகிந்த தனது சகாக்களுடன் இரகசிய  ஆலோசனை நடாத்துவதாக அறிந்தேன்.  எப்படியாவது அதில்  என்ன  நடக்கிறது  என அறிய  வேண்டும் என முடிவெடுத்தேன்.  முதலில் எனது தலைமயிரை  முன்னோக்கி  வாரிவிட்டேன்.   எனது முகமும் வட்டமுகமாகவும்  சப்பை மூக்காவும்   இருந்தமையால் வாயிற் காவலர்  என்னை சீனன் என நினைத்து ஒன்றும் விசாரிக்கவில்லை. அப்பாடா ஒருவாறு நுழைந்துவிட்டேன் என நினைத்தேன்.   எங்கும்  இராணுவ வீரர்கள் பாதுகாப்பு பலமாக இருந்தது.  ஒரு மண்டபத்திற்குள்  சோதனையின் பின்னர் அனைவரும்  அனுமதிக்கப்பட்டார்கள். நான் எப்படி நுழைவது என யோசித்தேன்.  அருமையான  இடியா தோன்றியது நான் மண்டப வாயிற் காவலரிடம் தமிழ் நாட்டில்  இருந்து  வருகின்றேன்.  கனி மொழி     இப்போது சிறையில் இருப்பதால் கருணாநிதி என்னை அனுப்பினாருங்கோ    சார் என்றேன். என்ன ஆச்சரியம் எந்தவித சோதனையும் இல்லாமல்  என்னை மண்டபத்துக்குள்  அனுமதித்தனர்.   அடடா  கருணாநிதிசாருக்கு  இவ்வளவு மரியாதையா?? சரி மண்டபத்திற்க்குள்ளே மகிந்தவின் நெருங்கிய   சகாக்கள் அமர்ந்திருந்தனர். ( அவரகளின்  பெயர்கள்  சிறிது  மாற்றம்  செய்துள்ளேன் )
 சோமாபாய, SLசீரிஸ் , குறுநா , டுக்கிலஸ் , விம்மல் வீரவன்ச

  சில நிமிடங்களின் பின்னர் மிகவும் கலக்கமுற்ற  முகத்துடன்  மகிந்த வந்தார் . ஆயுபோவன்  வயக்கம் (வணக்கம் )சில வெள்ளைக்காரர்கள்  என் மீது  போர் குற்றம் சுமத்தி வருகின்றனர். எவ்வளவு முயற்சி செய்தும்  இவர்களை   வழிக்கு கொண்டு  வர  முடியவில்லை. இவர்களை எமது வழிக்கு கொண்டிவர என்ன வழியெனக் கூறுங்கள்.
விம்மல் வீரவன்ச :- சாகும்வரையான உண்ணா விரதம் இருப்பேன்.

மகிந்த:- மறுபடியும் நான் வந்து யூஸ் கொடுத்து  முடித்து  வைக்கவா ?

டுக்கிலஸ் :- அனைவருக்கும் இலவச   தொலைக்காட்சிப்பெட்டி  கொடுப்போம்

 முனைங் :-  சார் நம்ம  கருணாநிதி மாதிரியே பேசுறார் 


   
மகிந்த :- அட தொலைக்காட்சிப்பெட்டியைக் கண்டுபித்ததே  வெள்ளைக்காரர்தான்

குறுநா  :- உங்களது பெயரில் யாழில் ஒரு விளையாட்டு மைதானத்தைத் திறந்துவிடுவோம்.

மகிந்த :- எங்கே  வந்து எதைப்  பெசுவதுதெனத்  தெரியவிலையா?

SL சீரிஸ் :- வெள்ளைக்காரர்க்கு ஒரு தண்ணிப் பாட்டி வைத்துவிடுவோம்

மகிந்த :-      அதுதான் ஏற்கனவே வைத்திவிட்டேனே!

சோமாபாய :- இங்குள்ள ஒருவருக்கும்  உலக  அரசியல்  அனுபவம்  போதாது  அமெரிக்காவில்  வெள்ளைகளுடன்  நிண்ட  காலம்  வாழ்ந்தவன்  என்ற  வகையில்  இப்போது  வெள்ளைக்காரர்க்கு நிர்வாணமாக  நடமாடுவதுதான்.  ரொம்ப  பிடிக்கும் எனவே எமது  நாட்டில்  நிர்வாணமாக  நடமாடும் கடற்கரையைத்  திறந்துவிடுவோம்.   கழியாட்ட  விடுதிகளையும்  திறந்துவிடுவோம். தமிழரின்  கலாச்சாரமும்  அழிந்து  தமிழினமும்  அழிந்து போகும்  எமக்கு   நல்ல   வருவாய்   கிடைக்கும். போர் குற்றம் சுமத்தும் வெள்ளைக்காரர்களையும் அங்கு நடமாடவிட்டு   எமது கைக்குள்  கொண்டுவரலாம்.

மகிந்த: - அருமையான ஆலோசனை தம்பி உடனே தொடங்குவோம்.



முனைங் :-(அடட பாவிங்களா   என்ன   முடிவு எடுத்தாலும் தமிழனை அழிப்பதை மையமாக வைத்து எடுக்கிறாங்க. சிங்களவனுக்கு   தமிழனை அழிப்பது இரத்தத்தில் உறிவிட்டுது   போல!)

 

((உங்க உள்குத்து புரியல... உண்மையான செய்தி என்ன...?))ஆதாரம் இந்த பகுதி உருவாக  பின்னூட்டம்   மூலம்   வினவிய Philosophy Prabhakaranனுக்கு  எனது  நன்றிகள் 

ஆதாரம் :-(( நிர்வாணமாக  நடமாடும் கடற்கரையைத்  திறந்துவிடுவோம்.   கழியாட்ட  விடுதிகளையும்...... தமிழரின் கலாச்சாரமும் அழிந்து .....))) என்ன காரணம் காண்க இது நடை பெறபோகும் புதிய அழிப்பு

  கருணாநிதின் தமிழ் பணி அம்பலம்

((வெள்ளைக்காரர்க்கு ஒரு தண்ணிப் பாட்டி வைத்துவிடுவோம்..))) 

இலங்கை அரசுடன் இந்திய கள்ள காதல்! அம்பலமாகும் உண்மைகள் 02

Share:
← Newer Post Older Post → Home

Popular Posts

Blog Archive

Search This Blog

Powered by Blogger.

Blog Archive