Recent Posts

இலங்கை இராணுவத்தின் வினைத்திறனை முன்னேற்ற இந்திய அரசாங்கம் இணக்கம்


இந்திய இலங்கை இராணுவத்தினருக்கு இடையிலான இரண்டு நாள் கலந்துரையாடல் கடந்த வெள்ளிக்கிழமை புதுடில்லியில் நிறைவடைந்தது. இக்கலந்துரையாடலில் இலங்கை இராணுவத்தின் வினைத்திறனை முன்னேற்ற இந்திய அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது.
இதன்போது இந்திய இராணுவக்கல்லூரிகளில் இலங்கை இராணுவத்தினருக்கு கல்வி சம்பந்தமான பயிற்சிகளை அதிகளவில் வழங்குதல், கலகத்தடுப்பு நடவடிக்கைகளை பகிர்ந்துக்கொள்வது போன்ற விடயங்களில் இரண்டு தரப்பும் இணக்கத்தை வெளியிட்டன.

இதனை தவிர இலங்கை இராணுவத்தினருக்கு பல பயி;ற்சித்திட்டங்களையும் வழங்க இந்தியா உறுதியளித்துள்ளது. இதில் மனிதாபிமான பயிற்சிகளும் உள்ளடங்கும். ஆங்கிலப்பயிற்சி மற்றும் விளையாட்டுத்துறையிலும் இந்திய இலங்கை இராணுவத்துக்கு உதவவுள்ளது 

நன்றி தமிழ் win
Share:
← Newer Post Older Post → Home

Popular Posts

Blog Archive

Search This Blog

Powered by Blogger.

Blog Archive